Wednesday, June 9, 2010

விரும்புங்கள்! அடைவீர்கள்!

உங்கள் ஆழ்மனம் எதை விரும்புகிறதோ அதை அடைவதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஈடுபட்டிருப்பது ஒரு துறையாக இருக்கும். ஆனால் உள்ளம் விரும்புவது வேறு துறையாக இருக்கும்.
மெல்ல மெல்ல நீங்கள் விரும்புவதை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.நாம் மனப்பூர்வமாய் எதை விரும்புகிறோமோ அதைத்தான் நம்மால் சிறப்பாக செய்யமுடியும்.
மற்றபடி காலத்தின் கட்டாயத்திற்காகவும். பொருளாதார தேவைக்காகவும் ஈடுபாடு இல்லாத துறையில் நம்மை இருத்தி வைப்பதென்பது இரண்டு துரோகம் செய்வதற்க்கு சமம்.
ஆம், ஒன்று நாமே நமக்கு இழைக்கும் துரோகம்.அடுத்தது செய்து கொண்டிருக்கும் தொழிலுக்கு செய்யும் துரோகம்.
என்னதான் நேரத்திற்க்கு கட்டுபட்டு கடமையைச் செய்கிறேன் என்று சமாதானம் சொன்னாலும், ஈடுபாடு இல்லாமல் செய்த சமையல் ருசியில்லாமல் இருப்பதைப் போல்தான் ஆழ்மன விருப்பமின்றி நாம் செய்யும் வேலையும் தரமில்லாமல் இருக்கும்.வெளிபடுத்த முடியாத ஏக்கத்தோடும். வெளிக்காட்டாத துக்கத்தோடும் வாழ்வது வாழ்க்கையாகுமா?
இதனால்தான் பலரும் “எப்படி இருக்கிறீர்கள்?” என்றால் “ ஏதோ இருக்கிறேன் ” என்கிறார்கள். அந்த ‘இருக்கிறேன்’ என்ற பதிலில் எத்தைனையோ பொருள் அடங்கியுள்ள்து.மேலோட்டமான ஆசைகளுக்கும் ஆழ்மன ஆசைகளுக்கும் இடையேயான வித்தியாசங்களை முதலில் உணர வேண்டும்.
‘இப்படி செய்யவேண்டும் என்று நினைத்தேன் ‘ ‘அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தேன் . என்று பலரும் நம்மிடம் பேசுவதை பார்க்கலாம். ஆனால் ஏதோ சில காரணங்களை கூறி அவற்றால் அப்படி செய்ய முடியவில்லை என்று அவர்களே அதற்கு விளக்கமும் சொல்லுவார்கள்.
உண்மையில் அவர்கள் கூறுவதெல்லாம் அவர்களின் மேலோட்டமான ஆசைகளே. அவை ஆழ்மன ஆசைகளல்ல.அப்படியிருந்திருந்தால் எப்பாடுபட்டாவது அதை அடைந்திருப்பார்கள்.
ஏதோ ஒன்றில் அல்லது சிலவற்றில் தனக்குத் தெரிந்த ஒருவர் வெற்றி பெற்றுவிட்டால் தானும் அப்படி வந்திருக்கலாம் என்று இயல்பாக எழும் எண்ணம்தான் அது.
தான் அடைய முடியாத ஒன்றிற்கு சூழலை ஒருவர் காரணம் காட்டுகிறார் என்றால் ஒன்று அது அவர் சக்தி எல்லைக்கு அப்பாற்பட்டதாய் இருக்கும்.இரணடு அதை அடைவதற்க்கு வேறெதையும் இழக்க தயாராயில்லை. மூன்று கிடைக்கும் வரை முற்சி செய்யவில்லை. அனைத்திற்க்கும் மேலாக அது அவருடைய ஆழ்மன விருப்பம் இல்லை.
ஒரு இலட்சியத்தை மனதில் வரித்துக் கொண்டால் அதை அடையும் வரை போராடியே ஆக வேண்டும்.
“ சிறு துன்பத்திற்காக அஞ்சி இலட்சியத்தைக் கைவிட்ட மனிதன், தானே பெரும் துன்பத்தை தழுவிக் கொள்ளுகிறான்”. என்கிறார் அறிஞர் வில்லியம் பிளேக்.
ஒருவழியில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் மற்றொரு வழியில் முயற்சி செய்வதுதானே வளர்ச்சியின் வரலாறு.
சர்.சி.வி. இராமன் - தன்னுடைய அயராத முயற்சிகளின் விளைவால் அற்புதக் கண்டுபிடிப்பை நிகழ்த்தி நம் நாட்டிற்கு நோபல் பரிசை பெற்றுத் தந்த விஞ்ஞானி. இராமன் அவர்கள் கல்லூரியில் பயிலும் போது அப்பாராவ் என்கின்ற அவருடைய நண்பர் ஒளியைப் பற்றிய ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தார்.அப்பாராவின் ஆரய்ச்சியில் அவருக்கே புரியாத புதிர்களும், தவறுகளும் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. ஆனால் சி.வி.இராமனிடம் அச்சிக்கல்களை கூறியதும் மிக எளிமையான முறையில் தீர்த்து வைத்தார்.
தன்னுடைய முடிவுகளை தான் மேற் கொண்ட முறையை இன்னும் செம்மை படுத்தவிரும்பிய இராமன் தன்னுடைய பேராசிரியரிடம் அக் கட்டுரையை கொடுத்து திருத்தித் தருமாறு கூறினார்.தன்னை விட தன் மாணவன் அறிவாளியாக் இருப்பதை பொருக்காத பேராசிரியர் அக்கட்டுரையை திருத்தி தராமல் காலங்கடத்தினார்.
அதனை அறிந்துகொணட இராமன் அக் கட்டுரையை வாங்கி அமெரிக்க நாட்டிருந்து வெளிவரும் அறிவியல் இதழுக்கு அதனை அனுப்பி வைத்தார். மிகசிறப்பாக இருந்த அக்கட்டுரையைப் பாரட்டி வெளியிட்டது அப் பத்திரிக்கை.
ஒரு பாதை சரிபடாத போது மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.

நமது நம்பிக்கை பத்திரிக்கையில் :- ருக்குமணி பன்னீர்செல்வம்

3 comments:

  1. நல்ல திறனாய்வு
    பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  2. வலையுலகில் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    ReplyDelete

ket_tavan. Powered by Blogger.